தமிழ்நாடு செய்திகள்

புழல் ஏரிக்கு நீர்வரத்து 536 கன அடியாக அதிகரிப்பு

Published On 2023-09-08 11:40 IST   |   Update On 2023-09-08 11:40:00 IST
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது.
  • கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

திருவள்ளூர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக பலத்த மழை பெய்தது.

அதிகபட்சமாக ஆவடியில் 8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

ஜமீன்கொரட்டூர்-74

செங்குன்றம்-34

கும்மிடிப்பூண்டி-5

பள்ளிப்பட்டு-20

ஆர்.கே.பேட்டை-54

சோழவரம்-28

பொன்னேரி-16

பூந்தமல்லி-23

திருவாலங்காடு-26

திருத்தணி-32

தாமரைப்பாக்கம்-23

திருவள்ளூர்-54

ஊத்துக்கோட்டை-3.

கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு அதிகபட்சமாக 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு3300 மி.கனஅடி. இதில் 1866 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு3645மி.கனஅடி. இதில் 2688 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 429 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 128 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 48 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி எரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2337 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மற்றும் மழைநீர் சேர்ந்து 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 80 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News