தமிழ்நாடு

கலைஞரின் நெஞ்சுக்கு நீதியில் "ஒரே நாடு, ஒரே தேர்தல்"

Published On 2024-02-14 06:33 GMT   |   Update On 2024-02-14 06:33 GMT
  • ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.
  • தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை:

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கூறியதாவது:

* ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நிறைய கேள்விகள் எழத்தான் செய்யும்.

* ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். 

* ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப்போவதில்லை.

* சில உறுப்பினர்கள் தாங்களாகவே, தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

* தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

* நெஞ்சுக்கு நீதியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News