தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: முதலமைச்சர் ஆலோசனை

Published On 2024-01-05 06:39 GMT   |   Update On 2024-01-05 06:39 GMT
  • முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
  • ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தொழிலாளர் நல கமிஷனர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News