தமிழ்நாடு
திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
- சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
- இதனால் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானது.
சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்ற பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
இதனால் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியாகி விட்டது. அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை தமிழக சட்டசபை செயலகம் மேற்கொண்டது.
இதற்கிடையே, திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது.