தமிழ்நாடு

ஓட்டு போட்ட மை அடையாளத்துடன் வந்து ஓட்டை காணவில்லை என பாஜகவினர் போராட்டம்

Published On 2024-04-25 09:08 GMT   |   Update On 2024-04-25 09:08 GMT
  • கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை
  • ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது - அண்ணாமலை

இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 19 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், "ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது. கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கோவையில் 'எங்கள் ஓட்டை காணவில்லை' என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தேர்தலில் ஓட்டு போட்ட மை அடையாளத்துடன் வந்து ஓட்டை காணவில்லை என பாஜகவினர் போராட்டம் நடத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

Tags:    

Similar News