தமிழ்நாடு
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 2 நாட்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்
- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோத போக்கு குறித்து மக்கள் மத்தியில் அவர் எடுத்து சொல்வார் என்று கூறப்படுகிறது.
- காசி தமிழ் சங்கமம் மூலம் ஒன்றுபட்ட மக்கள் உணர்வுகளை பொய் பிரசாரங்கள் மூலம் தடுப்பதை முறியடிக்கும் வகையில் அவரது பிரசாரம் அமையும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட வட இந்திய தலைவர்களும் வருகிறார்கள்.
மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர்கள், பிரபலங்கள் என 50 பேர் வருகிறார்கள். இவர்கள் 39 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் பயண திட்டங்கள் வகுக்கப்படுகிறது.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் பிரசாரத்துக்கு வருகிறார். அவர் 2 நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோத போக்கு குறித்து மக்கள் மத்தியில் அவர் எடுத்து சொல்வார் என்று கூறப்படுகிறது.
மேலும் காசி தமிழ் சங்கமம் மூலம் ஒன்றுபட்ட மக்கள் உணர்வுகளை பொய் பிரசாரங்கள் மூலம் தடுப்பதை முறியடிக்கும் வகையில் அவரது பிரசாரம் அமையும் என்று கூறப்படுகிறது.