தமிழ்நாடு

சென்னையில் ரெயில் தடம் புரண்டு விபத்து

Published On 2023-12-15 11:52 GMT   |   Update On 2023-12-15 11:52 GMT
  • தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • ரெயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பணிமனைக்கு சென்ற ரெயில் தடம் புரண்டது. ரெயில் பெட்டியின் நான்கு சக்கரங்களும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.

பணிமனைக்கு சென்ற ரெயில் என்பதாலும் பயணிகள் யாரும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரெயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News