தமிழ்நாடு

ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா தொடர்ந்து வழங்க நடவடிக்கை- சட்டசபையில் அமைச்சர் தகவல்

Published On 2024-02-21 07:14 GMT   |   Update On 2024-02-21 08:16 GMT
  • நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை.
  • அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

சென்னை:

சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

மார்ச் மாதத்திற்குள் முதலமைச்சர் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-

மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்தும், ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News