தமிழ்நாடு

பா.ஜனதாவிடம் 5 தொகுதிகள் கேட்டு ஓ.பி.எஸ் கடிதம்

Published On 2024-02-10 07:01 GMT   |   Update On 2024-02-10 08:57 GMT
  • வக்கீல் சதீஷ் சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
  • ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

சென்னை:

பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனி அணியாக செயல்படுகிறது. பா.ஜ.க.வை தவிர்த்து மற்ற கட்சிளை இணைத்து போட்டியிட தீவிரமாகி வருகிறது.

அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதற்கான அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கடந்த முறை தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே போல இந்த முறையும் அந்த தொகுதியில் மகனை நிறுத்த முடிவு செய்துள்ளார்.


மேலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தன்னை இந்த தேர்தல் மூலம் அ.தி.மு.க. தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதற்காக 5 தொகுதிகளை கேட்டு பா.ஜ.க. தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளர்களான கோபால கிருஷ்ணன் (மதுரை), ஜே.சி.டி. பிரபாகர் (ஸ்ரீபெரும்புதூர்), புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் வக்கீல் எம்.வி. சதீஷ் ஆகியோரில் சிலரை வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்துள்ளார். வக்கீல் சதீஷ் சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News