தமிழ்நாடு
மின்சார ரெயில்கள் ரத்து எதிரொலி- கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
- பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
- காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை :
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.