தமிழ்நாடு

கிருஷ்ணகிரிக்கு நாளை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகை

Published On 2023-03-09 10:06 GMT   |   Update On 2023-03-09 10:06 GMT
  • கிருஷ்ணகிரியில்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை மதியம் 3 மணி அளவில் திறந்து வைக்கிறார்.
  • காணொலி மூலம் தருமபுரி, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரிக்கு நாளை பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிறார்.

பெங்களூருக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

பின்னர், கிருஷ்ணகிரியில்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை மதியம் 3 மணி அளவில் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, காணொலி மூலம் தருமபுரி, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதா மாநில மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News