தமிழ்நாடு

இலங்கைக்கு இந்திரா காந்தி தான் கச்சத்தீவை கொடுத்தார்

Published On 2024-04-01 08:33 GMT   |   Update On 2024-04-01 09:46 GMT
  • தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.
  • போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.

இந்த பாராளுமன்ற தேர்தல் 2-வது சுதந்திர போராட்டம் போன்றது. பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கும் பா.ஜ.க.வுக்கு தொடர்பில்லை என்று கூறுகிறார்.

தமிழகத்தில் ஒன்று கள்ள கூட்டணி. மற்றொன்று நள்ளிரவு கூட்டணி உள்ளது. இவர்களுக்கு எதிராக தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.

போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதை பொருள் இறக்குமதி செய்யும் தாயிடம் குஜராத் தான்.

மோடி ஆட்சிக்கு வரும் போது வீட்டு சிலிண்டர் ரூ.410. ஆனால் இப்போது ரூ.1200 ஆக சிலிண்டர் விலை உள்ளது. அண்மையில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இப்போது குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை சம அளவில் உள்ளது.

கச்சத்தீவை இந்திரா காந்தி தான் இலங்கைக்கு கொடுத்தார். அப்போதைய முதல்வரைகூட கேட்கவில்லை.

கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்தனர். இன்றைக்கு கச்சத்தீவு பற்றி பேசும் மோடி 10 ஆண்டுகளில் அவர் விரும்பி இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்கலாம். ஆனால் மீனவர்களையும் படகுகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை.

சுங்கசாவடி கட்டனங்களும் உயர்த்தப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடி கட்டுபாட்டில் உள்ளது.மோடி நிர்ணயித்த தேதியில் தேர்தல் நடக்கிறது. சின்னம் ஒதுக்குவதற்கும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News