தமிழ்நாடு செய்திகள்

மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு! எடப்பாடி பழனிசாமி

Published On 2024-07-09 12:07 IST   |   Update On 2024-07-09 12:07:00 IST
  • இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை.
  • திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:

* புதுக்கோட்டையில் மர்மநபர்களால் வாலிபர் வெட்டிப் படுகொலை.

* தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது வாலிபர் வெட்டிப்படுகொலை.

* தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.

இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை.

எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது.

மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு!

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.




Tags:    

Similar News