தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பஸ்களில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு

Published On 2023-10-31 07:18 GMT   |   Update On 2023-10-31 07:18 GMT
  • தீபாவளி பண்டிகையையொட்டி 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,675 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 975 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.

சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், சொந்த ஊர் செல்ல அரசு பஸ்களில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News