வடசென்னை வேட்பாளரை ஆதரித்து நாளை திறந்த வேனில் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு
- தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 32 தெருக்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது சொந்த சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் நாளை காலை 7 மணிக்கு திறந்த வேனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 32 தெருக்களில் பிரசாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.கே.எம்.காலனியில் திறந்தவேனில் பிரசாரம் செய்வார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.