தமிழ்நாடு
மின்சார ரெயிலில் பயணிப்பவரா நீங்கள்... நாளை முதல் 3 நாட்களுக்கு உஷார்...
- சென்னை பரங்கிமலை- வேளச்சேரி ரெயில் பாதை இணைப்பு பணி நடைபெற்று வருகிறது.
- மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
சென்னை :
சென்னையில் மிகவும் முக்கியமான போக்குவரத்தாக மின்சார ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
இந்நிலையில், சென்னை பரங்கிமலை- வேளச்சேரி ரெயில் பாதை இணைப்பு பணி, தண்டவாள பராமரிப்பு பணிகளால் நாளை முதல் 3 நாட்களுக்கு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும் வரும் 3-ந்தேதி வரை தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 10.40 மணி முதல் 11.55 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.