தமிழ்நாடு
போதி தர்மருக்கு அரங்கம் அமைப்பது பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை- அமைச்சர்
- 1300 வருடங்களுக்கு முன்பாகவே பல்கலைக் கழகம் வைத்து தத்துவம் பரப்பிய மண் காஞ்சி.
- போதி தர்மரின் சீன பயணத்தில் மருத்துவ அறிவால் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார்.
சட்டசபையில் இன்று, வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய எழிலரசன் எம்.எல்.ஏ., பழைய நகரமாகவும் உலக தத்துவவாதிகள் இருக்க கூடிய மண்ணாக காஞ்சிபுரம் இருந்து கொண்டிருக்கிறது. 1300 வருடங்களுக்கு முன்பாகவே பல்கலைக் கழகம் வைத்து தத்துவம் பரப்பிய மண் காஞ்சி.
இங்கு அரச குடும்பத்தில் பிறந்த போதி தர்மரின் சீன பயணத்தில் மருத்துவ அறிவால் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். உலகமே அவரின் மருத்துவ அறிவு போதனைகளை பாராட்டி வருகிறது.
மேலும், மதவாதம் மன நோயாக மாறி வரும் நிலையில் ஆன்மபலம் பெறுவதற்கு போதி தத்துவங்களையும் மருத்துவ அறிவையும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் காஞ்சியில் அரங்கம் அமைக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.