தமிழ்நாடு
60 படகுகள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு விரைந்தன
- 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.
- கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் மழை தண்ணீர் வடியவில்லை. இதனால் குக்கிராமங்களில் சிக்கி இருக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இன்று 60 படகுகளுடன் மீனவர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் பிற்பகல் முதல் கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.