தமிழ்நாடு

தமிழ்நாட்டு மக்களிடம் பா.ஜனதாவிற்கு ஆதரவு அதிகரிப்பு: பா.ஜனதா மேலிட பொறுப்பாளர்

Published On 2024-04-17 03:37 GMT   |   Update On 2024-04-17 03:37 GMT
  • பெண்கள், இளைஞர்களிடையேயும், எளிய மக்களிடத்திலும் பா.ஜனதாவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள பா.ஜனதா தேர்தல் அலுவலகத்தில், வடசென்னை பாராளுமன்றத் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ் வடசென்னை தொகுதிக்கான தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு, தமிழக பா.ஜனதா மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தார்.

பின்னர், சுதாகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பா.ஜனதாவிற்கும், பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் மிகச்சிறப்பான ஆதரவு கிடைத்து வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்களிடையேயும், எளிய மக்களிடத்திலும் பா.ஜனதாவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வருகை தரும்போதும், பொதுக்கூட்டங்கள் மற்றும் வாகன பிரசாரத்தில் ஈடுபடும் போதும் ஏராளமான மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் பா.ஜனதாவில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிகளவிலான வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாக பாராளுமன்றம் செல்வார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரதமர் மோடியின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு ஒரு சட்டம், பிரதமருக்கு ஒரு சட்டமா?. தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி அரசியல் தான் முக்கியம். பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் கூறியதை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News