தமிழ்நாடு

மக்களை ஏமாற்றும் திமுக தேர்தல் அறிக்கை: செல்லூர் ராஜூ

Published On 2024-03-21 09:28 GMT   |   Update On 2024-03-21 09:58 GMT
  • பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
  • திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

மதுரை:

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* எங்களை பொறுத்தவரை மக்களுக்காக பணி, மக்கள் தான் எஜமானர்கள்.

* மதவாத இயக்கத்தைவிட அதிமுக ஆபத்தான கட்சி என விமர்சனம் செய்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கண்டிக்கிறேன்.

* பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.

* தேர்தல் களத்தில் மக்கள்தான் எஜமானர்கள்... மக்களை தான் தேடி செல்ல வேண்டும்.

* திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

* திமுக தேர்தல் அறிக்கை... இன்னும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவார்களோ.

* பிரதமர் மோடி சிலிண்டர் விலை குறைப்போம் என்றார் செய்தாரா?

* சிலிண்டர் விலை குறைப்பு வாக்குறுதி திமுகவின் மற்றொரு முகம் என்று கூறினார்.

Tags:    

Similar News