தமிழ்நாடு

23 பேர் சிறைப்பிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்

Published On 2024-02-05 05:14 GMT   |   Update On 2024-02-05 05:14 GMT
  • சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 23 பேருடன் இரண்டு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை வருகிற 14-ந்தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட னர். அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுத்து, தமிழக மீனவர்கள் சிறைப் பிடிப்பு சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும் மீனவ சங்கங்களும், மீனவர்களின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் 23 மீனவர்கள் சிறைப்பிடிப்பை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஏராளமானோர் இன்று வேலையிழந்துள்ளனர்.

Tags:    

Similar News