தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ம.க. தயாராக உள்ளது- அன்புமணி

Published On 2024-02-03 14:15 IST   |   Update On 2024-02-03 14:15:00 IST
  • டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,
  • பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன்.

சேலம்:

சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ம.க. தயாராக உள்ளதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். மேலும் தமிழகத்தில் குறுவை சம்பா பாதிப்பு காரணமாக அரிசி விலை இன்னும் ஏற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத தி.மு.க.விற்கு சமூகநீதி குறித்து பேச தகுதியில்லை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் முதலமைச்சருக்குதான் மனசு இல்லை.

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அன்புமணி, டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் பா.ம.க. போல சாதனைகளை செய்ய வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் ஈகோ பிரச்சனையால் பொதுமக்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தான் பாதிப்பு என்ற அவர் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு குறித்து அரசு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திட்டமிட்டு திறந்திருக்க வேண்டும். கோயம்பேடு பஸ் நிலையத்தை அவசரம் அவசரமாக அப்புறப்படுத்த பார்க்கிறார்கள். இங்கு பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்

பேட்டியின்போது எம்.எல்.ஏக்கள் அருள், சதாசிவம், வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, துணை தலைவர் தேவதாஸ் மாவட்ட செயலாளர்கள் ராஜசேகர், நாராயணன் மற்றும், கதிர் ராசரத்தினம், சத்திரிய சேகர் விஜயராசா, உள்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News