தமிழ்நாடு

பிரதமர் மோடி வருகை மீண்டும் 2 நாட்கள் தள்ளிப்போகிறது?

Published On 2024-02-12 06:59 GMT   |   Update On 2024-02-12 06:59 GMT
  • பல்லடத்தில் பிரதமர் மோடி பிரமாண்டமான கூட்டத்தில் பேசுவார் என்றும் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • கூட்டத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சென்னை:

பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்லடத்தில் அவர் பிரமாண்டமான கூட்டத்தில் பேசுவார் என்றும் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பல்லடம் பொதுக்கூட்டம் தள்ளிப்போவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 25-ந்தேதிக்கு பதில் 27-ந்தேதி பிரதமர் மோடி பல்லடம் வருவார் என்று கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பா.ஜ.க. வட்டார தகவல்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News