தமிழ்நாடு

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்கள் என்னுடைய சொந்தங்கள்- பிரதமர் மோடி

Published On 2024-03-04 13:54 GMT   |   Update On 2024-03-04 13:54 GMT
  • குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன.
  • ஆனால், நான் நாட்டு மக்களை நினைத்து அரசியல் செய்கிறேன்.

சென்னையில் நடைபெற்று வரும் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டுள்ளது.

திமுக அரசின் மனக்குறை என்னவென்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக செல்வதே.

லட்சக்கணக்கான கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என திமுக வருந்துகிறது.

நீங்கள் கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும்.

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன.

ஆனால், நான் நாட்டு மக்களை நினைத்து அரசியல் செய்கிறேன்.

ஒரு லட்சம் வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இன்று கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே உருவான ஈனுலை தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஈனுலை பணி செய்ய தொடங்கும்போது இந்தியா உலகின் 2வது நாடாக இருக்கும்.

இலக்கு பெரியதாக இருக்கும்போது, உழைப்பும் பெரியதாக இருக்க வேண்டும்.

பாரதம் தன்னுடைய மின் சக்தி தேவைகளுக்காக எவ்வளவு பெரிய பணியை செய்ய வேண்டியுள்ளது என தெரியுமா ?

தெலுங்கானாவில் 1,600 மெகாவாட் தெர்மல் பவர் பிளான்ட்டிற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடந்த 50 நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் மின் சக்தி உற்பத்திக்கான பல ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன.

நான் இப்போது கூறும் விஷயத்தை கவனமுடன் கேளுங்கள். சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரஜனால் இயங்கும் படகு ஒன்றை தொடங்கி வைத்தேன்.

இந்தியாவில் உள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் தரும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். பிரதமரின் சூரிய வீடு திட்டம் உங்களுக்கானது, முழுவதும் இலவசமானது.

நீங்கள் உங்கள் வீட்டின் மேற்கூரையின் சோலார் தகடுகள் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.

அதிகப்படியான மின்சாரத்தை நீங்கள் விற்கலாம். உங்களுக்கு லாபம்.

இந்த திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு திமுகவையும் தெரியும், காங்கிரசையும் தெரியும், இவர்களை போல் பலர் உள்ளனர்.

இவர்களின் குறிக்கோள் குடும்பம் முதலில், ஆனால் எனக்கோ நாடு முதலில்.

மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்கிறார்கள், அவர்களுக்கு குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திருடுவதா ?

இந்த நாடு தான் எனவு குடும்பம், நாட்டு மக்கள் தான் எனது குடும்பம். நாட்டின் இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் அனைவரும் எனது குடும்பத்தினர்.

"நாட்டு மக்கள் தான் எனது குடும்பம்"/"நாட்டின் இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் அனைவரும் எனது குடும்பத்தினர்.

நான் தான் மோடியின் குடும்பம் என தொண்டர்கள் முழக்கம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்கள் என்னுடைய சொந்தங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News