தமிழ்நாடு செய்திகள்

சென்னை வருகிறார் பிரதமர் மோடி

Published On 2024-10-03 10:30 IST   |   Update On 2024-10-03 10:30:00 IST
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • அக்டோபர் 6-ந்தேதி பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 92-வது இந்திய விமானப்படை தினத்தையொட்டி, அக்டோபர் 6-ந்தேதி காலை 11 மணியளவில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.

இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் இந்திய விமானப்படை தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் நடைபெறும் விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக அக்.6-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

Tags:    

Similar News