தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு

Published On 2024-02-15 09:30 GMT   |   Update On 2024-02-15 10:06 GMT
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.
  • வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு வரும் 19-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.

* வரும் 19-ந்தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும்.

* வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.

* ரூ.2000 செலுத்தி, தி.மு.க. வேட்பாளருக்கான விண்ணப்ப படிவத்தை கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags:    

Similar News