தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்திற்கு வரும் 5-ந் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட்
- வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும்.
- வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்திற்கு நாளை முதல் வரும் 5ந்தேதி வரை ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* நாளை முதல் 5ந்தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
* வரும் 3 மற்றும் 4ந் தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* இந்த கால கட்டத்தில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாக கூடும்.
இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.