தமிழ்நாடு

வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு

Published On 2023-06-02 08:03 GMT   |   Update On 2023-06-02 08:03 GMT
  • போலீசார் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • இருவரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பாண்டு மகன் சக்கரவர்த்தி (வயது28). இவர் மொரப்பூரில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது சக்கரவர்த்தி வரும் வழியில் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சக்கரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

இதேபோன்று தருமபுரி மாவட்டம் துக்கப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). விவசாயியான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே சென்றார். அப்போது அந்த வழியாக புதுகொக்காரப்பட்டியைச் சேர்ந்த பிரபு (31) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது இருவரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த ரமேசை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 3 பேர் பலியான சம்பவம் அவரவர் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News