தமிழ்நாடு

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும்: மு.க.ஸ்டாலின்

Published On 2024-04-10 15:16 GMT   |   Update On 2024-04-10 15:16 GMT
  • மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
  • பிரதமர் மோடி தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார் என்றார்.

தேனி:

தேனி லட்சுமிபுரம் பகுதியில் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை ஆற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும்.

மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது. பாராளுமன்றத்தில் விவாதம் இருக்காது. மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்காது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சமூக நீதியை குழிதோண்டி புதைத்து விடும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார்.

திராவிட மாடலால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. வளர்ச்சியை மோடி மஸ்தான் வேலையால் தடுக்கமுடியாது. வேண்டாம் மோடி என்று தெற்கிலிருந்து ஒலிக்கும் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.

தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என இந்தியில் பேசி மோடி மஸ்தான் வித்தை காட்டுகிறார் பிரதமர் மோடி.

10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடி சாதனைகளாக எதையும் சொல்ல முடியாமல் உள்ளார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News