தமிழ்நாடு செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

Published On 2023-03-21 10:03 IST   |   Update On 2023-03-21 12:48:00 IST
2023-03-21 04:48 GMT

வேளாண்மையின் நோக்கம் பயிற்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவது.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு.

ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

2023-03-21 04:46 GMT

வேளாண்மை என்பது பணி அல்ல, வாழ்க்கை முறை. தானியங்கள் மட்டுமல்ல, காய்கறி, பழங்களையும் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய சவாலாக உள்ளது.

உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

2023-03-21 04:42 GMT

வேளாண்மையை தொன்று தொட்டு கடைபிடித்து வருவதாக இலக்கியங்கள் கூறுகிறது. இயற்கையோடு நடத்துகின்ற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை ஆகிவிட்டது.

விவகாய நிலங்கள் குறைந்து வரும் காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

2023-03-21 04:39 GMT

தமிழக சட்டசபையில் சரியாக 10 மணிக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அமைச்சர் பச்சை துண்டு அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

2023-03-21 04:36 GMT

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று பட்ஜெட் நகலை வைத்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News