தமிழ்நாடு செய்திகள்

கூலித் தொழிலாளியின் வீடு நள்ளிரவில் தீப்பிடித்து எறிந்தது- ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

Published On 2023-08-13 11:44 IST   |   Update On 2023-08-13 11:44:00 IST
  • 10 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
  • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பிஞ்சலார் தெருவில் வசித்து வருபவர் வசந்தி(வயது36) கூலித் தொழிலாளி ஆவார். இவர் நேற்று இரவு தனது மகன்கள் பாலாஜி, பார்த்தசாரதி ஆகியோருடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிலிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனால் திடீரென அவர் அலறி அடித்து எழுந்தார். தனது மகன்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீ மள, மளவென வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எறிந்தது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தேர்வாய் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 10 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதற்குள் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பேன், துணிகள் உள்ளிட்ட சுமார் ரூ.1லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயிக்கு இறையானது. இச்சம்பவம் குறித்து வசந்தி இன்று காலை ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது கேஸ் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது? காரணமா! என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News