தமிழ்நாடு

அ.தி.மு.க.வை இணைக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாக சசிகலா சொல்வது வடிகட்டிய பொய்- ஜெயக்குமார்

Published On 2022-12-26 06:55 GMT   |   Update On 2022-12-26 06:55 GMT
  • சசிகலா பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யின் உருவம்.
  • ஓ.பி.எஸ்.சின் ஊதுகுழலாகவே இருங்கள். தப்பில்லை. ஆனால் உங்களை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்.

சென்னை:

அ.தி.மு.க. அணிகளை ஒன்று சேர்ப்பதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன். அது நடந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஒன்றிணையும் என்று சசிகலா தெரிவித்து இருந்தார்.

இதற்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்படுகிறது. கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

இணைப்பு பேச்சு நடப்பதாக சசிகலா கூறியிருப்பது வடிகட்டிய பொய். அவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யின் உருவம்.

அ.தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்வதில் இருந்தே அவர்தான் தி.மு.க.வின் பி.அணியாக செயல்படுகிறார். தி.மு.க.வுக்காக வேலை செய்கிறார் என்பது தெளிவாகி விட்டது.

நீங்கள் ஓ.பி.எஸ்.சின் ஊதுகுழலாகவே இருங்கள். தப்பில்லை. ஆனால் உங்களை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ.2500, கரும்பு உள்ளிட்ட பொருட்களை அனைத்து கார்டுகளுக்கும் வழங்கினோம். ஆனால் இப்போது கொடுப்பது ரூ.1000. கரும்பு கிடையாது. அதுவும் கார்டிலும் பாகுபாடு பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News