தமிழ்நாடு செய்திகள்

இணை செயலாளர்களை நேரடியாக நியமிப்பது சமூகநீதிக்கு எதிரானது- ராமதாஸ்

Published On 2024-08-20 15:15 IST   |   Update On 2024-08-20 15:15:00 IST
  • தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
  • அனைத்து நியமனங்களும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னை:

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது சமூக நீதிக்கு எதிரானது. இந்த முறையில் செய்யப்படும் நியமனம் வெளிப்படையாக இருக்காது. எனவே, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர், இயக்குனர்கள் உள்ளிட்ட நிலைகளில் தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News