தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 495 மதிப்பெண்கள் எடுத்து மாணவி சாதனை

Published On 2023-05-19 14:53 IST   |   Update On 2023-05-19 14:53:00 IST
  • திண்டுக்கல் மாணவி பவித்ரா 495 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் இடம் பிடித்துள்ளார்.
  • மாணவி பவித்ராவுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் எஸ்.எம்.பி.எம். பள்ளியை சேர்ந்த மாணவி பவித்ரா 495 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை விஜய்ஆனந்த் ஜவுளிகடை வைத்துள்ளார்.

நாகல்நகர் முனியப்பன்கோவில் தெருவை சேர்ந்த மாணவி பவித்ரா தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூகஅறிவியல் 99 என மொத்தம் 495 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News