தமிழ்நாடு

தண்டவாளத்தில் 2 வாலிபர்கள் சடலம்: ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலையா?

Published On 2023-11-09 06:55 GMT   |   Update On 2023-11-09 06:55 GMT
  • மற்றொருவரின் உடல் முழுவதும் சிதைந்து கிடந்ததால் அவரை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
  • இரண்டு பேரின் உடல்களும் தண்டவாளத்தின் இருபுறத்திலும் தனித்தனியாக கிடந்தது.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை 2 வாலிபர்கள் பிணமாக கிடந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவர்களில் ஒருவரது செல்போன் எண்ணை வைத்து அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மற்றொருவரின் உடல் முழுவதும் சிதைந்து கிடந்ததால் அவரை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.

உடல்கள் கிடந்த இடம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல பாதை இல்லை. மேலும் இரண்டு பேரின் உடல்களும் தண்டவாளத்தின் இருபுறத்திலும் தனித்தனியாக கிடந்தது. எனவே அவர்கள் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்ததில் இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ரெயிலில் பயணம் செய்த போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News