மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்
- “வருகிற 1-ந் தேதி நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.
- தமிழினத் தலைவர் கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
சென்னை:
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
"வருகிற 1-ந் தேதி நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நம் தலைவர், கழகத்தை 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.
தந்தை பெரியாரின் சமூகநீதியையும், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
அத்தகைய பெருமைமிகு தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது" என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வருகிற மார்ச் 2, 3 மற்றும் 4-ந்தேதிகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாநகரம் மற்றும் நகரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சாளர்களைக் கொண்டு, "எல்லோருக்கும் எல்லாம்" "திராவிட மாடல் நாயகர் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடத்திட வேண்டும்.
2-ந்தேதி: ஈரோடு-கனிமொழி எம்.பி., திருவெறும்பூர்-அமைச்சர் ஐ.பெரியசாமி, நாமக்கல்-திருச்சி சிவா, திண்டுக்கல்-பொன்முடி, நாகை-அமைச்சர் எ.வ.வேலு, நாகர்கோவில்-அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலூர்-அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை-தயாநிதி மாறன், கோபிசெட்டி பாளையம்-ஆ.ராசா, கிருஷ்ணகிரி-காசிமுத்து மாணிக்கம் மற்றும் முக்கிய நகரங்களில் பேசுபவர்கள் விவரம்.
3-ந்தேதி: திருமங்கலம்-அமைச்சர் கே.என்.நேரு, கோவை-ஆ.ராசா, கடலூர்-அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விருதாச்சலம்-அமைச்சர் எ.வ.வேலு, காஞ்சிபுரம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பேசும் இடங்கள்.
4-ந்தேதி: துரைமுருகன் செங்கல்பட்டு-கழகப் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் பல்வேறு ஊர்களில் பேசுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.