தமிழ்நாடு

மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-02-26 14:20 GMT   |   Update On 2024-02-26 14:21 GMT
  • அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை.
  • மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு.

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னதாக, பேரறிஞர் அண்ணாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர், கருணாநிதி நினைவிடம் முன்பு நிறுவப்பட்டுள்ள சிலையை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திறப்பு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கருணாநிதியின் நினைவிடத்தை சுற்றிலும் அவரது பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கும். அங்கு, கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களை பொன்னாடை போர்த்தி முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்தார்.

Tags:    

Similar News