தமிழ்நாடு செய்திகள்

தொடர்ந்து புகார்.. கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாநகராட்சி

Published On 2024-08-04 17:43 IST   |   Update On 2024-08-04 17:43:00 IST
  • மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
  • சிறப்பு நுண்ணறிவு போலீசார் வாரியாக கவுன்சிலர்கள் குறித்து விசாரணை.

அதிக கமிஷன் கேட்டு பணிகள் நிறுத்தம், ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் என கவுன்சிலர்கள் மீது தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, சிறப்பு நுண்ணறிவு போலீசார் வாரியாக கவுன்சிலர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மாதவரம், அம்பத்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சில கவுன்சிலர்களுக்கு நோடீஸ் அனுப்பப்பட்டுத்தாகவும், இதில், 4 திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News