தமிழ்நாடு

சென்னை சென்டிரல்-மேற்கு வங்காளம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

Published On 2024-04-24 03:02 GMT   |   Update On 2024-04-24 03:02 GMT
  • சென்னை சென்டிரல்-மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
  • மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22611) இன்று (புதன்கிழமை) முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும்.

அதேபோல, மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News