தமிழ்நாடு
சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு
- பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேச முற்பட்டார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளித்தார்.
சென்னை:
சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேசுவதற்கு பா.ம.க. அனுமதி கோரியது.
அதன்மீது பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அவரது பேச்சும் அவை குறிப்பில் ஏறாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் விரிவாக விளக்கம் அளித்தார். இருப்பினும், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.