தமிழ்நாடு

பணத்தை வைத்து கோவையை வென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்: அண்ணாமலை

Published On 2024-04-19 03:10 GMT   |   Update On 2024-04-19 04:59 GMT
  • இந்த முழு தேர்தலை மிக மிக நேர்மையாக நடத்தி இருக்கிறேன்.
  • பணத்தை வைத்து கோவை மக்களை தமிழ்நாடு முழுவதுமே வாங்கி விடலாம் என்று திமுக மற்றும் வேறு வேறு கட்சிகள் நினைக்கிறார்கள்.

கரூர்:

இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்த பின் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையிடம், செய்தியாளர்கள் GPay மூலம் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக அளித்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

இந்த முழு தேர்தலை மிக மிக நேர்மையாக நடத்தி இருக்கிறேன்.

திமுக-வை பொறுத்தவரை பணத்தை வைத்து கோவையை வென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கோவையில் பாஜக கட்சியில் இருந்து யாருக்கேனும் பணம் கொடுத்துள்ளதாக சொன்னார்கள் என்றால் அந்த நிமிடம் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.

இது தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டம். களத்தில் நின்று கொண்டிருக்கிறேன். எல்லோரையும் எதிர்த்து நின்று கொண்டிருக்கிறேன்.

பணத்தை வைத்து கோவை மக்களை தமிழ்நாடு முழுவதுமே வாங்கி விடலாம் என்று திமுக மற்றும் வேறு வேறு கட்சிகள் நினைக்கிறார்கள். இந்த தேர்தலை முழு நேர்மையாக வெளிப்படையாக அறம் சார்ந்து நடத்தி இருக்கிறோம்.

ஆனால் அதற்கு கோவை மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். கரூரிலும் பதிலடி கொடுப்பார்கள் என்று கூறினார்.

Tags:    

Similar News