தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு- வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

Published On 2023-03-17 14:07 GMT   |   Update On 2023-03-17 14:38 GMT
  • போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் ரூ.25000 செலுத்தி விருப்ப மனு பெறலாம்.
  • மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

சென்னை:

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கட்சியின் சட்ட விதியின்படி பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் நாளை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். மார்ச் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம். மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 27ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25000 செலுத்தி விருப்ப மனு பெறலாம். விதிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News