தமிழ்நாடு

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு: நல்லவைகளை பற்றி மட்டும் பேசுங்கள்- ஓ.பன்னீர்செல்வம் கருத்து

Published On 2023-09-27 10:04 GMT   |   Update On 2023-09-27 10:04 GMT
  • ஆதித்தனார் ஐயாவின் பிறந்தநாள் நன்னாளில் அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார்.
  • அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி சொன்னார். பின்னர் அவர் கூறியதாவது:-

அன்போடு, பாசத்தோடு, தமிழர் தந்தை என்று போற்றப்படும் ஆதித்தனார் ஐயாவின் பிறந்தநாள் நன்னாளில் அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார்.

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார். அதை மாற்றவோ திருத்தம் செய்யவும் முடியாது என்றார்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பிளவு குறித்த கேள்விக்கு, தமிழர் தந்தை பிறந்தநாளில் நல்லவைகளை பற்றி மட்டும் பேசுவோம் என்றார்.

Tags:    

Similar News