தமிழ்நாடு

வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் "மோடி": ஏ.சி.சண்முகம்

Published On 2024-04-10 05:33 GMT   |   Update On 2024-04-10 05:33 GMT
  • தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து வந்தார்.
  • உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார்.

வேலூர்:

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார். வேலூர் பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமர் மோடியை கோஷம் எழுப்பி உற்சாகமாக பாஜக தொண்டர்கள் வரவேற்றனர்.

தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து வந்தார். தொண்டர்களை பார்த்து தலை தாழ்த்தி வணக்கம் சொன்னார் பிரதமர் மோடி.

பொன்னாடை அணிவித்து பிரதமர் மோடியை பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கவுரவித்தனர்.

பிரதமர் மோடியை வரவேற்று வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

* வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி.

* உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார்.

* இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய போர் தளவாடங்கள் ஏற்றுமதிக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி.

* அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News