செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றை தடுக்க ஊருக்குள் நுழைய தடுப்பு அமைத்து வேப்பிலை கட்டி தொங்கவிட்ட மக்கள்

Published On 2021-05-30 15:18 IST   |   Update On 2021-05-30 15:18:00 IST
கொரோனாவை தடுக்க சாலையின் குறுக்கே வேப்பிலைகளை கட்டி தொங்க விட்டுள்ளதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் கோவில் குளம் இப்பகுதியில் கொரோனா கட்டுப்படுத்த சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வேப்பிலைக் கட்டி தொங்க விட்டுள்ளனர்.

இதேபோல் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த சில தெருக்கள் தகரசீட் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது, நகரில் ஒரு சில கடைகாரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றில் இளம் வயதினர் மரணம் ஏற்படுவதால் பொதுமக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக வீடுகளிலேயே தங்கி உள்ளனர். வேதாரண்யத்தில் பெரும்பாலான கிராமங்களில் கொரோனாவின் பரவல் மிக அதிகமாக காணப்படுவதால் ஆங்காங்கே தெருக்கள் அடக்கப்பட்டும், ஊருக்குள் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தி, கோயில்குளம் தெற்கு காட்டில் சாலையை அடைந்து குறுக்கே மரங்களை போட்டு அடைத்து வேப்பிலைகளை தொங்கவிட்டு உள்ளனர்.

வெளிநபர்கள் யாரையும் இப்பகுதியில் அனுமதிப்பது இல்லை. கொரோனாவை தடுக்க சாலையின் குறுக்கே வேப்பிலைகளை கட்டி தொங்க விட்டுள்ளதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Similar News