செய்திகள்
தீவிபத்து

ஆரணியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

Published On 2020-11-15 09:53 IST   |   Update On 2020-11-15 09:53:00 IST
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் ரோடு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 8 வயது சிறுவன், பெண் உட்பட 3 பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News