செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 306 பேருக்கு கொரோனா

Published On 2020-07-29 14:15 IST   |   Update On 2020-07-29 14:15:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 306 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 306 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,323 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 4,853 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 3,370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர்.

Similar News