செய்திகள்
வீட்டின் பின் கதவைத் தட்டிய கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி
ஆலங்குடியில் வீட்டின் பின் கதவைத் தட்டிய கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் நித்யா.இவரது கணவர் கோபிநாத் (வயது 39).இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
நித்யா தனது குழந்தைகளுடன் தனது பெற்றோருடன் கலைஞர் காலனியில் வசித்து வந்தார். இந்தநிலையில் கோபிநாத் கடந்த அக்டோபர் 27- ந் தேதி இரவு நித்யா இருக்கும் கலைஞர் காலனி வந்து வீட்டின் பின் கதவைத் தட்டியுள்ளார்.உடனே நித்யா யார் என்று கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. தவறான எண்ணத்துடன் யாரோ கதவைத் தட்டுவதாக நினைத்த நித்யா அடுப்பில் இருந்த வெந்நீரைத் தூக்கி கதவைத் திறந்த உடனே ஊற்றியுள்ளார்.ஊற்றியதும் கோபிநாத் அலறியுள்ளார்.
விளக்கை போட்ட நித்யா பிறகுதான் தான் வெந்நீர் ஊற்றியது தனது கணவன் கோபிநாத் என்று தெரிந்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் கோபிநாத்தை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அதிகமாக உள்ளதால் தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் நித்யாவை அழைத்து விசாரனை நடத்தியதில் அவர் திட்டமிட்டு வெந்நீர் காய்ச்சி கணவர் மீது ஊற்றியது தெரியவந்தது. உடனே வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலங்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் நித்யா.இவரது கணவர் கோபிநாத் (வயது 39).இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
நித்யா தனது குழந்தைகளுடன் தனது பெற்றோருடன் கலைஞர் காலனியில் வசித்து வந்தார். இந்தநிலையில் கோபிநாத் கடந்த அக்டோபர் 27- ந் தேதி இரவு நித்யா இருக்கும் கலைஞர் காலனி வந்து வீட்டின் பின் கதவைத் தட்டியுள்ளார்.உடனே நித்யா யார் என்று கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. தவறான எண்ணத்துடன் யாரோ கதவைத் தட்டுவதாக நினைத்த நித்யா அடுப்பில் இருந்த வெந்நீரைத் தூக்கி கதவைத் திறந்த உடனே ஊற்றியுள்ளார்.ஊற்றியதும் கோபிநாத் அலறியுள்ளார்.
விளக்கை போட்ட நித்யா பிறகுதான் தான் வெந்நீர் ஊற்றியது தனது கணவன் கோபிநாத் என்று தெரிந்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் கோபிநாத்தை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அதிகமாக உள்ளதால் தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் நித்யாவை அழைத்து விசாரனை நடத்தியதில் அவர் திட்டமிட்டு வெந்நீர் காய்ச்சி கணவர் மீது ஊற்றியது தெரியவந்தது. உடனே வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலங்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.