செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்த 3 பேர் கைது

Published On 2019-05-11 08:22 GMT   |   Update On 2019-05-11 08:22 GMT
நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யபடுவதாக வேலூர் கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் தலைமையிலான போலீசார் இன்று காலை எரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி வேனில் 3 பேர் வந்தனர். வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் போலி மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன், (வயது 36). கோவிந்தராஜ், சரவணன் என தெரிய வந்தது

மேலும் அவர்கள் போலி மதுபானங்கள் தயார் செய்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன் மற்றும் 270 போலி மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News