செய்திகள்

அதிமுகவிடம் பாமகவை ராமதாஸ் அடகு வைத்துவிட்டார்- திண்டுக்கல் லியோனி தாக்கு

Published On 2019-04-06 15:05 GMT   |   Update On 2019-04-06 15:05 GMT
அ.தி.மு.க.விடம் பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் அடகு வைத்துவிட்டார் என்று திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார். #dindigulleoni #ramadoss #modi

தர்மபுரி:

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தர்மபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

அ.தி.மு.க.விடம் பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் அடகு வைத்துவிட்டார். பா.ம.க.வை நம்பி இருக்கும் மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். 8 வழிச்சாலை, நீட் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அன்புமணி அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்து உள்ளார். 200 மாணவர்களின் கேள்விக்கு விடை கொடுத்த டாக்டர் அன்புமணியால் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.

தமிழின போராளியாக போராடிய ராமதாஸ் இன்றைக்கு மோடியோடு கூட்டணி வைத்து ‘பாரத் மாதாஹி ஜே’ என்று கோ‌ஷம் போடுகிறார்.

தமிழகத்தில் முனியாண்டி விலாஸ் கிளை இருக்கும் அளவிற்கு கூட பா.ஜனதாவின் கிளைகள் கிடையாது. நாட்டின் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று தெரிவித்த மோடி ஒருவருக்கும் கூட அதை போடவில்லை. ஏமாற்றி விட்டார்.

இவ்வாறு அவர் பேசினார். #dindigulleoni #ramadoss #modi

Tags:    

Similar News